Padasalai.Net.in - No.1 Educational Website

மாணவர் சேர்க்கை குறைந்தாலும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

            மாணவர் சேர்க்கை குறைந்தாலும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

​மாணவர் சேர்க்கை குறைந்​தா​லும், அரசுப் பள்​ளி​களை மூடும் எண்​ணம் இல்லை என பள்​ளிக்கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே கீழடி​யில் நடை​பெறும் 11-ம் கட்ட அகழாய்​வுப் பணி​யை​யும், திறந்​தவெளி அகழ் வைப்​பகத்​தை​யும் பார்​வை​யிட்ட பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: முந்​தைய ஆட்​சிகளில் தொடங்​கப்​பட்ட அனைத்து நல்லதிட்​டங்​களை​யும் தவெக அரசு நிறுத்​தாது. அதில் இருக்​கும் குறை​கள் சரி செய்யப்பட்டு மேம்​படுத்​தப்​படும்.


பழி​வாங்​கும் அரசி​யல் எங்​களிடம் இல்​லை. கீழடி மட்​டுமின்றி அகரம், கொந்​தகை உள்​ளிட்ட இடங்​களி​லும் அகழாய்​வு​கள் நடை​பெறுகின்​றன. மேலும், தேவை​யான அறி​வியல் சான்​றுகளைத் தாக்​கல் செய்து கீழடி அகழாய்வு முடிவுகளைவெளி​யிட, இந்​திய தொல்​லியல் துறை​யிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும்.

கட்டண விவரங்​களை வெளி​யி​டாதது குறித்து புகார் வந்த பள்​ளி​களுக்கு மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் எச்​சரிக்கை விடுத்​துள்​ளனர். தனி​யார் பள்​ளி​கள் அரசு நிர்​ண​யித்த கட்​ட​ணத்தை மட்​டுமே வசூலித்து விதி​களை பின்​பற்ற வேண்​டும். மாணவர் சேர்க்கை குறைந்​தா​லும், அரசுப் பள்​ளி​களை மூடும் எண்​ணம் இல்​லை. வீடு, வீடாகச் சென்று அறி​வுறுத்தி மாணவர் சேர்க்கை அதி​கரிக்​கப்​படும். தமிழகத்​தில் காம​ராஜர் ஆட்​சி​தான் தொடர்​கிறது. அரசுப் பள்​ளி​களில் காலை உணவுத் திட்​டம் விரிவுப்​படுத்​தப்​படும்.

மத்​திய வெளி​யுறவுத் துறை​யிடம் சட்​டப்​பூர்வ அனு​மதி பெற்​றுத்​தான் வெளி​நாட்​டுப் பயணம் மேற்​கொண்​டோம். இதில் எந்த சட்​ட​விரோத​மும் இல்​லை. கட்​சி​யில் இணை​யும் அனை​வரை​யும் அரவணைத்​துச் செல்​வோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

சமணர் கல்வெட்டுகள்: இதனிடையே, மதுரை மாவட்​டம் மாங்​குளம் அரு​கே​யுள்ளமீனாட்​சிபுரம் மலை​யில் கிமு 3-ம் நூற்​றாண்டைச் சேர்ந்த சமணர் படுக்​கை, தமிழ் பிராமி எழுத்​துகள் பொறித்த கல்​வெட்​டு​களை அமைச்​சர் பார்​வை​யிட்​டார். கல்​வெட்​டு​களின் கால​கட்​டம், வரலாற்று முக்​கி​யத்​து​வம், பாது​காப்பு நடவடிக்கை குறித்து அதி​காரி​களிடம் கேட்​டறிந்​தார்.

பின்​னர், அமைச்​சர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழ் மொழி, கலை, இலக்​கி​யம், பண்​பாடு விழு​மி​யங்​கள், பொக்​கிஷங்​களை தமிழ்​நாடு முழு​வதும் மேம்​படுத்த ஆய்வு செய்​கிறோம். இதுபற்றி முதல்வரிடம் அறிக்​கை​ சமர்ப்​பிக்​கப்​படும். இதன்​மூலம் தொல்​லியல் பொக்​கிஷங்​களை பாது​காத்து மேம்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​படும்.

கீழடி தமிழர்​களுக்கு மட்​டுமின்றி உலக நாகரி​கத்​துக்​கும் பெரிய தாய்​மடி​யாகும். பத்​திரி​கை​யாளர்​கள் நலம் சார்ந்த திட்​டங்​கள் தனிமனித தலை​யீடு இன்றி நிறைவேற்​றப்​படும். பள்ளி மாணவ, மாணவி​களுக்​கான சீருடை மாற்​றம் குறித்த அறிக்கை முதல்​வரிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. அதுகுறித்து விரை​வில் முடி​வெடுக்​கப்​படும். இவ்​வாறு தெரி​வித்​தார்.
Share:

TET | ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு ரத்து... நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டமியற்ற ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

        TET | ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு ரத்து... நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டமியற்ற ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

2011ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதுவதிலிருந்து, அரசாணைக்கு முன்பு பணியில் சேர்ந்த பழைய ஆசிரியர்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பிற விதிகளை பின்பற்றி நியமிக்கப்படுகின்றனர். 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்ற நிலை தான் இருந்தது. ஆனால், அவர்களுக்கு தகுதித் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2011&ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தீர்ப்பளித்தது

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் நடைபெற்றது. இந்த முக்கியமான கூட்டத்திற்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் த. தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில் மாநில மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் நலன்கள் மற்றும் பணிப் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் த. தியாகராஜன் கூறியதாவது, " தேசிய அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) கட்டாயமாக நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக, பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

எனவே, தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு பணியில் சேர்ந்த பழைய ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இதிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். இதற்காகத் தமிழக அரசு மத்திய அரசுக்குத் தகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான உரிய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமன்றி, உச்ச நீதிமன்றத்தை முறைப்படி அணுகி இந்தத் தீர்ப்பு குறித்த முழுமையான விளக்கத்தையும் அரசு பெற வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர்கள் தங்களின் பணியைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் இந்தத் தகுதித் தேர்விற்குத் தயாராவதற்காக நீண்ட விடுமுறை எடுத்துப் படிக்கும் சூழல் உருவாகும் என்றார். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மிகுந்த பொறுப்புணர்வோடு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரித்த தவெக, தற்போது அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் இக்கூட்டத்தின் வாயிலாகத் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது
Share:

Definition List

Unordered List

Support